எட்டாக்கனி
இரு விழியின் ஊடாக
பூமியைப் பார்க்கின்றேன்
தெரியவில்லை - அது
இருட்டாக உள்ளது,
கடிகரத்தின் ஊடாக
காலத்தைப் பற்றுகின்றேன்
கிட்டவில்லை - அது
வேகமாகிறது,
பள்ளியின் ஊடாக
கல்வியைத் தெடர்கின்றேன்
முடியவில்லை - அது
ஓடுகின்றது,
நம்பிக்கையின் ஊடாக
வாழ்வை ஓட்டுகின்றேன்
ஓடவில்லை - அது
நின்றுவிட்டது,
உறவின் ஊடாக
பாசத்தை எதிர்பார்த்தேன்
கிடைக்கவில்லை - அது
எட்டாக்கனியாகிவிட்டது.....
R.J.Prakash
No comments:
Post a Comment