Monday, August 15, 2011

கந்தலாய்ப் போய்விடும்..


கந்தலாய்ப் போய்விடும்..


பெண்கள் பலகோடியிருந்தும்
கண்களுக்குள் சுழன்றாடினாய்!
வார்த்தைகள் பலகோடியிருந்தும்
பார்வைகளால் பேசினாய்!


மடிகின்ற வேளையிலும்
துடிக்கின்ற என் இதயம்;
உனக்காக என் ஜீவன் - என்று
கனாக்காண முடியவில்லை.


மனத்தில் இனம் புரியாத ஆசை
மௌனத்தில் போய் முடிகிறது. - நீ
கிட்டத்தில் வரும் போது - கால்கள்
எட்டத்தில் ஓடுகின்றது.


காத்திருப்பும் ஓர் இன்பமாம் - பல்லி
சாத்திரம் சொல்லிற்று.
பந்தமாய் முடியாவிடில் - காதல் 
கந்தலாய்ப் போய்விடும்...

No comments:

Post a Comment