Monday, September 5, 2011

சில காதலில் சொன்ன பொய்கள், திருமணத்தின் பின் நடந்தேறும் நிஜங்கள்....

சில காதலில் சொன்ன பொய்கள், திருமணத்தின் பின் நடந்தேறும் நிஜங்கள்....


'என் எயிர் நீதானே', ஆனால்.. அந்த உயிருக்காக ஒன்றும் செய்யிறதில்லை.
'ஒரு நிமிஷங்கூட உன்னைப் பிரியமாட்டேன்', ஆனால்.. நாள் கணக்கில் வேலையில் மூழ்கிறது.
'நீ என் வாழ்விலை வரவேணும்', ஆனால்.. 'உன்னை எப்ப சந்திச்சனோ அப்பவே எல்லாம் போச்சு'.
'உன்னை கண்கலங்காமல் பாத்துப்பன்', ஆனால்.. போதையில் வந்து சாட்டை அடி, தலையில் இடி விழுந்தா என்னான்னு  இருக்கும்.
'உனக்காக என்னுசிரைத்த தருவன்', ஆனால்.. 'உன்ரை உசிர் வேணும்னா இங்கை இருக்காத அப்பன் வீட்டுக்கு ஓடிடு'.
'உன் கால் கொலுசாகணும்' ஆனால்.. ஒரு வெள்ளி மெட்டி கூட வாங்கிக் கொடுக்கிறதில்லை.
'உன்ரை குரலை நான் எப்பவும் கேக்கணும்', ஆனால்.. யாரவது வந்தால் தலையே காட்டக்கூடாது.


இத்தனைக்கும் ஒன்று மட்டும் நிஜமாகுதையா!!!
'நாம அஞ்சு பிள்ளைகுட்டி பெத்துக்கலாம்', ஆனால்.. அதைவிட கூட பெத்துக்கிறது எல்லாம் எலிக்குஞ்சு அளவிலை.

No comments:

Post a Comment