ஒரு தடவை....
ஒரு தடவை....
ஒரு தடவை
வந்து பாரேன்,,,
என் விழிகளுக்கு இன்னமும்
முள்வேலி போடவில்லை...
ஒரு தடவை
பேசிப் பாரேன்,,,
என் செவிகள் இன்னமும்
கெட்டுப் போகவில்லை...
ஒரு தடவை
சிரித்துப் பாரேன்,,,
என்கைகள் இன்னமும்
பூக்களைத் தொடவில்லை...
ஒரு தடவை
சிந்தித்துப் பாரேன்,,,
என் இதயம் உன்னை
நினைக்காமல் இயங்கவில்லை...
No comments:
Post a Comment